அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அருப்புக்கோட்டை பகுதியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:15 am

அருப்புக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை வழக்கம்போல், வெயில் கொளுத்தியது. 
மாலை சுமார் 4.40 மணி அளவில், திடீரென மேகங்கள் திரண்டு சிறு தூறலாக மழை  பெய்ய ஆரம்பித்தது. அப்போது, சூரிய கதிர்கள் மேற்கிலிருந்து பிரகாசமாக வீச, உச்சிமேகத்திலிருந்து பெய்த சிறுதூறல் முத்துமுத்தாக விழுந்தது. 
 சிறிதுநேரத்தில் அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் சாலையில் நீர் ஓடும் அளவுக்கு மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.