விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்த மாவு ஆலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தளவாய்புரம் அரிசி ஆலையில், ரேஷன் அரிசியை மாவாக்கி, மாட்டுத்தீவனமாக விற்பதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தளவாய்புரம் பால் டிப்போ அருகில் உள்ள மாவு மில்லை ஆய்வு செய்த போது, 250 கிலோ ரேஷன் அரிசியினை, மூட்டைகளில் மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்களிடம் கிலோ ரூ.5 விலையில், ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து, மாட்டுத்தீவனத்திற்கு வெளிச்சந்தையில் விற்று வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மாவு ஆலைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர். கைப்பற்றப்பட்ட அரிசியினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்தனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு, பரிந்துரை செய்துள்ளதாக ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
