விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரஃபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் மோடி முறைகேடு செசய்ததாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கண்டித்து சிவகாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சோலையப்பன் தலைமை வகித்தார். ரஃபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் மோடி யை அவதூறாக பேசிய ராகுல்காந்தியை கண்டித்து கோஷமிடப்பட்டது.
இதில் மாவட்டத் துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவுத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியத் தலைவர் சந்திரசேகர், சட்டப் பேரவை தொகுதி செய்தித் தொடர்பாளர் ஜி.ஆறுமுகச்சாமி, நகர பொதுச் செயலர் குருநாதன், திருத்தங்கல் நகரத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


