மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதி சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை நகரின் ராமசாமிபுரம் பகுதியில் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் வழிகளை முறையாகக் குறிப்பிடும்வகையில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அப்பலமாக சேதமடைந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் வாகனங்கள் இச்சாலை சந்திப்பில் வந்து அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலை எது? மதுரைக்குச் செல்லும் சாலை எது என தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
இதில் வழி தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 4 கி.மீ. வரை சுற்றிச் சென்று அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இச்சந்திப்பு குடியிருப்புகள் இல்லாத ஆளரவமற்ற பகுதி என்பதால் வழிகேட்டுச் செல்லும் சாத்தியமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இப்பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வெட்டு! வெளிப்படையான நடவடிக்கை வேண்டும்: தி.வேல்முருகன்

பிளஸ் 1 மாணவி தற்கொலை

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல் கண்டெடுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


