ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அவதூறு:  நகராட்சி வருவாய் அலுவலர் மீது பெண் ஊழியர்கள் புகார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வருவாய் அலுவலர் மீது

Updated On :25 டிசம்பர் 2018, 6:39 am IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊழியர்கள் திங்கள்கிழமை ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகராட்சியில் 20 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 தினங்களாக இங்கு பணியாற்றும் பெண்களை, உடன் பணியாற்றும் ஆண்களுடன் இணைத்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அவதூறு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. 
நகராட்சி ஊழியர்கள் விசாரித்த போது, இங்கு பணியாற்றும் வருவாய் அலுவலர் தனக்கு பிடிக்காத ஊழியர்கள் மீது, தன் உதவியாளர்கள் இருவர் உதவியுடன் அவதூறு கடிதம் எழுதி அனுப்பியது கண்டுபிடிக்கப் பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் மூலம் அளித்த புகாரின் பேரில் இதற்கு உடந்தையாக இருந்த காளிமுத்து, அருண்குமார் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் வருவாய் அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி,  60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்திங்கள்கிழமை ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.