விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊழியர்கள் திங்கள்கிழமை ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகராட்சியில் 20 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 தினங்களாக இங்கு பணியாற்றும் பெண்களை, உடன் பணியாற்றும் ஆண்களுடன் இணைத்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அவதூறு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.
நகராட்சி ஊழியர்கள் விசாரித்த போது, இங்கு பணியாற்றும் வருவாய் அலுவலர் தனக்கு பிடிக்காத ஊழியர்கள் மீது, தன் உதவியாளர்கள் இருவர் உதவியுடன் அவதூறு கடிதம் எழுதி அனுப்பியது கண்டுபிடிக்கப் பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் மூலம் அளித்த புகாரின் பேரில் இதற்கு உடந்தையாக இருந்த காளிமுத்து, அருண்குமார் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் வருவாய் அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்திங்கள்கிழமை ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

திருத்தணி - சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


