ராஜபாளையம், சேத்தூர், தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சன்னரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை ரூ. 1, 590, ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ. 70, எனவும் பொதுரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை ரூ. 1, 550, ஊக்கத்தொகை ரூ. 50 என கொள்முதல் செய்யப்பட்டு, தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். சுத்தம் செய்யப்பட்ட நெல் 17 சதவீதத்திற்கு குறைவாக ஈரப்பதம் இருக்கவேண்டும். தனியாரிடம் செல்வதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் செயல்படுத்தப்படும் இந்த கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தலாம் என மாவாட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராஜபாளையம் பகுதி விவசாயிகள் இதை வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.