பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

News image
Updated On :9 ஜூலை 2018, 1:23 am

DIN

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். அதில், தமிழக அரசு உத்தரவுக்கு மாறாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு துணையாக செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.