பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, 4-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் 

Updated On :7 ஜூன் 2018, 7:11 am IST

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, 4-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் 
செய்த மனுவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
அருப்புக்கோட்டை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை உதவிப் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விடுமுறை கால அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கெனவே மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 விடுமுறை முடிந்து வழக்கமான நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 4-வது முறையாக நிர்மலாதேவி  மனு தாக்கல் செய்தார். இந்த மனு, அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில், நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.