அருப்புக்கோட்டை அன்புநகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை புதியபேருந்து நிலையம் அருகே உள்ள இப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் 4ஆவது வார்டான நெசவாளர் காலனியோடு இணைந்துள்ள இந்த அன்பு நகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதி இதுவரை செய்துதரப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் வீட்டு முகப்பு வளாகத்துக்குள் ஆழமான குழிகளைத் தோண்டி அதில் வீட்டுப்புழக்க நீரை விடுகின்றனர்.
இதையடுத்து பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பின்னர் இங்குள்ள முதல் தெருவில் மட்டும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. பிற உள்தெருக்களில் இவ்வசதிகள் செய்து தரப்பட வில்லை. இதனால் இருளில் தவிக்கும் இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டின் முகப்பு விளக்கை பாதுகாப்பு கருதி இரவில் எப்போதும் எரியவிட வேண்டியுள்ளது. எனவே அன்புநகரில் கழிவுநீர்க் கால்வாய், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!

பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

