தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சிவகாசி அரசு கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா

ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வளத் துறை அமைச்சர்

Updated On :29 மார்ச் 2018, 11:19 pm

ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி புதன்கிழமை மரக்கன்று நடும் விழாவினை தொடக்கி வைத்தார்.
     விழாவில் அவர் பேசியதாவது: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
     விருதுநகர் மாவட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு வனத் துறை சார்பில், வளம் குன்றிய வனப் பகுதியில் 24 ஆயிரம் மரக்கன்றுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1,97,000 மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. அனைவரும் ஒருங்கிணைந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், மாவட்ட வன உயிரினக் காப்பாளர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் தினகரன், கோட்ட வன அலுவலர் மித்ரன் பாண்டியன், கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.