மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காந்தி நகர் மேம்பாலம் அருகே விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி நகர் மேம்பாலம் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :14 மே 2018, 7:05 pm

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி நகர் மேம்பாலம் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் காந்தி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்திற்கும் அதனையடுத்துள்ள ரயில்வே மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட சுமார் 400 மீட்டர் நீளச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
பாலத்தின் அணுகுச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உரிய போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சாலையைக் குறுக்காகக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே இருச்சக்கர வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் விபத்துக்களைத் தவிர்க்க இப்பகுதியில் விபத்துப் பகுதி எனும் எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். அபாய எச்சரிக்கை ஒளிர்விளக்குக் கம்பங்களையும் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.