ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆறாம்மைல் நீர்தேக்கத்திற்கு அய்யனார்கோயில் ஆற்றில் தடுப்பணை அமைத்து நீர் தேக்கப்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அய்யனார் ஆற்றின் வடக்கு பகுதியிலிருந்து வரும் மலட்டாறு நீர் பாதையில் தடுப்பணை கட்டி தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால் கண்மாய்களுக்கு நீர்வரத்தின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ராஜபாளையம் நகர தலைவர் முருகேசன் கூறுகையில், முதல் நீர் தேக்கத்திற்காக தடுப்பணை கட்டியதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டோம். சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது நீர் தேக்கத்திற்கு புதிதாக தடுப்பணை அமைத்ததால் நெல் விவசாயம் குறைந்ததுடன் 6 கி. மீ. சுற்றளவில் தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் பட்டுப்போகின. இரண்டாவது நீர் தேக்கத்திற்கான தடுப்பணையை அகற்ற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

