சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
சிவகாசியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, சாத்தூரை அடுத்த கனஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு சனிக்கிழமை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது.
அதில் ஒரு அறையில் மட்டும் பட்டாசு பணிகள் முடிந்து, வெடி மருந்துகள் மீதம் வைக்கபட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில், அந்த அறை மட்டும் இடிந்து சேதமடைந்தது.இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

