15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

சாத்தூரில் புதிய பாலத்தில் விளக்குகள் இல்லை: பொதுமக்கள் புகார்

சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்து 6 மாதத்துக்கு மேலாகியும்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:31 am IST

சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்து 6 மாதத்துக்கு மேலாகியும் விளக்குகள் அமைக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
     விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே ரூ. 13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, கடந்தாண்டு ஜூலை 4 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர், இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கின.
     ஆனால், இந்த பாலத்தில் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி, பாலத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    இது குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்களும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
    எனவே, புதிய பாலத்தில் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.