சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாத்தூரில் புதிய பாலத்தில் விளக்குகள் இல்லை: பொதுமக்கள் புகார்

சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்து 6 மாதத்துக்கு மேலாகியும்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:31 am IST

சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்து 6 மாதத்துக்கு மேலாகியும் விளக்குகள் அமைக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
     விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே ரூ. 13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, கடந்தாண்டு ஜூலை 4 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர், இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கின.
     ஆனால், இந்த பாலத்தில் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி, பாலத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    இது குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்களும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
    எனவே, புதிய பாலத்தில் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.