விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்-சிவகாசி சாலையைச் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்களும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இதனால் இச் சாலையில் தினமும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதிகளவில் பட்டாசு ஆலைகளும் இப் பகுதியில் உள்ளன. ஆனால் இச் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
தற்போது இச் சாலை மிகவும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இதில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் சின்னகாமன்பட்டி அருகே சாலையின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியதால் தற்போது சாலையே பெரிய பள்ளமாகி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே இச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


