ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சாத்தூர்-சிவகாசி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்-சிவகாசி சாலையைச் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 2:14 am IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்-சிவகாசி சாலையைச் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சாத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்களும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இதனால் இச் சாலையில் தினமும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதிகளவில் பட்டாசு ஆலைகளும் இப் பகுதியில் உள்ளன. ஆனால் இச் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
  தற்போது இச் சாலை மிகவும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இதில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
  மேலும் சின்னகாமன்பட்டி அருகே சாலையின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியதால் தற்போது சாலையே பெரிய பள்ளமாகி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே இச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.