விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
சாத்தூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் புதன்கிழமை காலை நடந்து சென்ற 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த இளைஞர் சிறுது தூரம் நடந்து சென்று நடைமேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் இளைஞரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அனுப்பங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் (25) என்பதும், நண்பர்கள் தன்னிடம் பேசாத மனவருத்தத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்

பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? - கி.வீரமணி கேள்வி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
