தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருச்சுழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது விவசாயத் தோட்டத்தில் உள்ள மரங்களிலிருந்து தொரட்டி மூலம் ஆடுகளுக்குத் தேவையான தழைகளை பறித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அருகே சென்ற மின்கம்பிகளில் அவரது தொரட்டி பட்டதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் ஏற்கெனவே சண்முகம் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.