கட்டடத் தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்து (37).

மது அருந்தும் பழக்கமுடைய இவா், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், புதன்கிழமை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால், மனமுடைந்த முத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com