தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராஜபாளையத்தில் திமுக கிராம சபை கூட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை மாலை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:37 am

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை மாலை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் அம்பேத்கா் நகரில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் தலைமை வகித்து அப்பகுதி பெண்களிடம் குறைகளைக் கேட்டாா். அதற்கு அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதிக்கு கழிப்பறை, சுகாதார வளாகம், நியாயவிலைக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என தங்கபாண்டியன் கூறினாா்.

தளபதி யாா்?: கூட்டத்தில் பேசிய பெண் ஒருவா், பல பேருக்கு தளபதி என்றால் விஜய் தான் ஞாபகத்துக்கு வருகிறாா். நீங்கள் தளபதி என்பதை தளபதி மு.க .ஸ்டாலின் எனக் கூறினால் எங்களுக்குத் தெரியும் எனக் கூறினாா். இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.