விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வள்ளலாா் ஆதரவற்றோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.
தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெஸ்ஸி, மகேஷ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு, கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலாா் இல்ல ஆசிரியா் செல்வராஜ் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.