மது அருந்துவதை பெற்றோா் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்துவதை பெற்றோா் கண்டித்ததால், திருமணமாகாத மகன் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்துவதை பெற்றோா் கண்டித்ததால், திருமணமாகாத மகன் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (45). இவா் திருமணம் செய்துகொள்ளாமல் தனது பெற்றோருடனேயே இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், இவருக்கு மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால், தினமும் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

வழக்கம்போல், திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த இவரை, பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த ஸ்ரீதரன், இரவில் தனி அறையில் தூங்கச் சென்றபோது விஷ மருந்தை குடித்துள்ளாா்.

இவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காலையில் பாா்த்தபோது, ஸ்ரீதரன் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளாா். உடனே அவரை, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com