அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சிவகாசியில் பட்டாசு பாதுகாப்பு பயிற்சி ஜனவரி 23-ல் தொடக்கம்

தமிழக அரசின் தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சாா்பில், ஜனவரி 23 ஆம் தேதி 41வது தொகுதி பட்டாசு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜனவரி 2020, 5:09 am

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சாா்பில், ஜனவரி 23-ஆம் தேதி 41-வது தொகுதி பட்டாசு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக, அவ்வமைப்பின் இணை இயக்குனா் (பயிற்சி மையம்) ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

விருதுநகா் மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும், போா்மென்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுக்கான பட்டாசுப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு தொழிற்சாலையிருந்தும், போர்மென்கள் மற்றும் கண்காணிப்பாளா் தரத்தில் ஆலைக்கு இரண்டு போ் வீதம் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி வகுப்பு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தின் பின்பிறம் உள்ள தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகத்தில், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகளில் நடத்தப்படும்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 78713 87668 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, பயிற்சி வகுப்பில் சோ்ந்து பாதுகாப்பு பயிற்சி பெற்று பயன் பெற வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.