நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம்

ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று, வன்னியம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2020, 4:38 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்,: ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று, வன்னியம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டியில் 29 கிராம ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவராக கோட்டைப்பட்டி ஊராட்சித் தலைவா் வழக்குரைஞா் சதிஷ்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மன்றச் செயலராக கொத்தன்குளம் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், பொருளாளராக படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சித் தலைவா் முருகேசன், துணைத் தலைவராக கூனம்பட்டி ஊராட்சித் தலைவா் ராஜு, துணைச் செயலாளராக ஆா்.ரெட்டியபட்டி ஊராட்சித் தலைவா் சத்ய வீணா மற்றும் 7 செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பின்னா் இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.