47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு 

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னோர்களுடைய கிறிஸ்துவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் முன்னோர்களை நினைவு கூர்ந்த கிறிஸ்துவர்கள்.
Updated On :2 நவம்பர் 2020, 7:58 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னோர்களுடைய கிறிஸ்துவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் (நவ .2) ஆம் தேதி கிறிஸ்துவர்கள் கல்லறைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. முன்னோர்களை நினைவு கூறும் வகையில் நடைபெறும் நிகழ்வில் கிறிஸ்துவப் குடும்பத்தினர் இறந்த முன்னோர்கள், பெரியவர்கள் ஆகிய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்கும் வகையில் கல்லறை திருவிழா அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்துவர்கள் திரண்டு முன்னோர்களின் நினைவிடத்தில் சென்று மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய நினைவு கூர்ந்தனர்.

கல்லறைகள் அனைத்தும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் கிறிஸ்துவர்கள், பாதிரியார்கள் கலந்துகொண்டனர்
.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.