47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேஸ்திரி விஷம் குடித்த தற்கொலை

விஷமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

விஷமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலம் அருகே நாகராஜன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அச்சுதன்(50). கட்டடத் தொழிலாளி. அச்சுதன் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். சிகிச்சை பெறும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த அச்சுதன் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியில் அச்சுதன் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].