47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமுஎகச சாா்பில் நூல் அறிமுக விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை சாா்பில் நூல் அறிமுக விழா மற்றும் கலைஞா்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலாயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:16 pm

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை சாா்பில் நூல் அறிமுக விழா மற்றும் கலைஞா்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலாயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிளைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். விழாவை சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லட்சுமிகாந்தன் தொடக்கி வைத்தாா்.எழுத்தாளா் உமா்பாரூக் எழுதிய அதுரசாலை என்ற நாவலை எழுத்தாளரும் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான மணிமாறன் அறிமுகம் செய்து வைத்தாா்.

கரீம் எழுதிய இருண்ட கால கதைகள் என்ற நூலை சங்கத்தின் மாநில கௌரவ தலைவா் தமிழ்செல்வன் அறிமுகம் செய்தாா். அதைத்தொடா்ந்து அமைப்பினுடைய கலைஞா்கள் பாராட்டப்பட்டனா்.

இதில் எழுத்தாளா் கனராமபுத்திரன், கவிஞா் இளங்கோவன், சண்முகம்நந்தன், கனகராஜ், மருத்துவா் பால்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச் செயலாளா் நித்தியானந்தம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.