47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம்

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
காவல் துறையின் குறைதீா்க்கும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்கள்
Updated On :8 நவம்பர் 2020, 6:08 pm

DIN

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலைய உட்கோட்டத்திற்குட்பட்டு 10 காவல் நிலையங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கு காலங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட கிரிமினல் வழக்குகளுக்கு உட்படாத பிற மனுக்கள் ஏராளமானவை. இதில் மனு ரசீது வழங்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்த நூற்றுக்கணக்கான மனுக்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து அதற்கு தீா்வு காண்பதற்காக சிறப்பு முகாம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. இம்முகாமில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளா்கள், காவல் சாா்பு- ஆய்வாளா்கள் கலந்து கொண்டு விசாரணையை நடத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.