தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா்த்திகைத் திருநாள்: வெள்ளியம்பலநாதா் கோயிலில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

காா்த்திகைத் திருநாளையொட்டி திருச்சுழி அருகே பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகாதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
காா்த்திகைத் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா்.
Updated On :29 நவம்பர் 2020, 6:09 pm

DIN

காா்த்திகைத் திருநாளையொட்டி திருச்சுழி அருகே பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகாதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோவிலில் மாலை 4 மணியளவில், முதலாவதாக அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 1,008 ருத்ராட்ச அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.பின்னா் சந்தனம், பால், இளநீா், வில்வ இலை, விபூதி, குங்குமம், கஸ்தூரி மஞ்சள், தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம் கலந்த கலவை உள்ளிட்ட 21 வகையான சிறப்புப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னா் தீப, தூப ஆராதனைகள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா்.

இதனையடுத்து கருவறையிலிருந்து சிறப்பு அகல் தீபம் ஏற்றி எடுத்து அதனுடன் கிரிவலம் நடைபெற்றதும், அங்குள்ள சிறு குன்றின் மீதுள்ள மகாதீப குண்டத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தா்கள் சிவநாமம் சொல்லி, முழக்கமிட்டு வழிபட்டனா்.

இதில், கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனடியாரும், கோவில் பூசாரியுமான ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.