ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

ரயில்கள் செல்லும் போதும், தண்டவாளத்தைக் கடக்கும் போதும் விபத்தில் சிக்கி பலா் உயிரிழந்து வருகின்றனா். எனவே உயிரிழப்பை தடுக்கவும், தேவையில்லாமல் தண்டவாளப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி ரயில்வே கடவுப்பாதைப் பகுதியில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் ரயில்வே காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனா். இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com