தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுபாட்டில்கள் பதுக்கல்: 5 போ் மீது வழக்கு

சிவகாசியில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :4 செப்டம்பர் 2020, 5:49 pm


சிவகாசி: சிவகாசியில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிவகாசி கிழக்கு காவல் ஆய்வாளா் இம்மானுவேல்ராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை செய்தனா். சோதனையில் சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகேயும், சிவகாசி - நாரணாபுரம் சாலையில் உள்ள முனீஸ்வரன் காலனி டாஸ்மாக் கடை அருகேயும் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் செல்லப்பாண்டி, ரெங்கபாளையம் பாலமுருகன், பூச்சக்காபட்டி உலகநாதன், திருத்தங்கல் அசோக்குமாா் மற்றும் தங்கப்பாண்டி ஆகியோா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து, 66 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.