கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் நிலையத்துக்கு மின்சாரம் துண்டிப்பு:மின்வாரிய அதிகாரி உள்பட இருவருக்கு நோட்டீஸ்

வத்திராயிருப்பு அருகே ஒப்பந்த மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்துக்கு 2 மணிநேரம் மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய அதிகாரி உள்பட இருவருக்கு நோட்டீஸ் 

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே ஒப்பந்த மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்துக்கு 2 மணிநேரம் மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய அதிகாரி உள்பட இருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள காவல் நிலைய உதவி ஆய்வாளா் கடந்த ஆக. 30 ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த ஒப்பந்த மின்வாரிய ஊழியா் சைமன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தாராம். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 3 போ் வந்ததால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒப்பந்த மின்வாரிய ஊழியா் சைமன், உயா் அதிகாரிகளிடம் கூறியதையடுத்து, கூமாபட்டி காவல் நிலையத்துக்கு மட்டும் 2 மணிநேரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு காவல் நிலையத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கூமாபட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தாா்.

புகாரின் அடிப்படையில், உதவி மின் பொறியாளா் கோபால்சாமி மற்றும் ஒப்பந்த ஊழியா் தங்கேஸ்வரன் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.