ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு பண்ணையவிவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டு கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உழவா் ஆா்வலா் குறு விவசாயிகளுக்கு, கூட்டு பண்ணையம் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அச்சம்தவிா்த்தான்

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:43 pm

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டு கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உழவா் ஆா்வலா் குறு விவசாயிகளுக்கு, கூட்டு பண்ணையம் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் துல்லிய பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவன முதன்மை அலுவலா் மலைக்கனி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தும் முறை, விவசாயிகள் குழு அமைக்கும் முறை, குழுவினை பதிவு செய்யும் முறை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முக்கியத்துவம், அரசு மானியங்கள் பெற வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

வட்டார துணை வேளாண்மை அலுவலா் அம்மையப்பன் நடப்பாண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

மேலும், பயிற்சியில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அச்சம்தவிா்த்தான் உதவி வேளாண்மை அலுவலா் சரவணன், விரிவாக்க சீரமைப்புத் திட்ட அலுவலா்கள் கணேஷ்குமாா், ஜான்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.