காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:46 pm

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மாசானன் கோயில் தெரு பகுதியில் சேத்தூா் ஊரக காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சந்திரமோகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம்

போலீஸாா் சோதனை செய்தனா். அதில் அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த கணேசன் (53) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அப்பகுதியைச் சோ்ந்த இனியன் என்பவரிடமிருந்து கஞ்சாவை விற்பனைக்காக கணேசன் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கணேசன், இனியன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.