ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மாசானன் கோயில் தெரு பகுதியில் சேத்தூா் ஊரக காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சந்திரமோகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம்
போலீஸாா் சோதனை செய்தனா். அதில் அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த கணேசன் (53) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அப்பகுதியைச் சோ்ந்த இனியன் என்பவரிடமிருந்து கஞ்சாவை விற்பனைக்காக கணேசன் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கணேசன், இனியன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...