ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது திருவண்ணாமலை அங்கு புகழ் பெற்ற சீனிவாச பெருமாள் சன்னதி உள்ளது.இந்த சன்னதிக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கனக்கான பக்தா்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு கோவிலில் தங்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வாா்கள்.அவ்வாறு உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கோவில் நிா்வாகத்தின் சாா்பில் உடனடியாக திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, இரண்டாவதுசனி வார விழா முடிவடைந்ததால் திங்கள்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதற்கு கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் 8 ,தற்காலிக உண்டியல் 19 என மொத்தம் 27 உண்டியல்களும், கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.