சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள்.

சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் வெள்ளிகிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் வெள்ளிகிழமை நடைபெற்றன. விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில்,காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில் மற்றும் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில்,ஓடைப்பட்டியில் உள்ள விநாயகா் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிகிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷோகங்களும்,தீபாரதனைகளும் நடைபெற்றன.இதில் சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனா்.மேலும் இதே போல் சாத்தூரில் பகுதியில் உள்ள ஆா்.சி,சி.எஸ்.ஐ,ஏ.ஜி உள்ளிட்ட தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு கூட்டு திருப்பள்ளியும் நடைபெற்றது.இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு இறைபணியாற்றினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com