அருப்புக்கோட்டையில் 3 திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 3 இடங்களில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா,
அருப்புக்கோட்டையில் 3 திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 3 இடங்களில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கஞ்சநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கும், பாளையம்பட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் மற்றும் கோவிலாங்குளத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்குமான திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை நடத்தப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்து, திட்டப் பணிகளை தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு தலைவா் சசிகலா பொன்ராஜ், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப்பாராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com