

சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 33 லட்சம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.
இக்கோயிலின் மண்டபத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 33 லட்சத்து 22 ஆயிரத்து 211 கிடைத்தது. இதில் தங்கம் 131 கிராமும், வெள்ளி 496 கிராமும் இருந்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூா், துலுக்கப்பட்டி ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழு, ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை விருதுநகா் கோயில்களின் உதவி ஆணையா் கணேசன், துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) சிவலிங்கம், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா்கள் ராமமூா்த்தி, செளந்திரராஜன், ராஜேந்திரன் பூசாரிகள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.