திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மலேசியாவில் உடல்நலம் பாதித்த கணவரை மீட்க நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு: மாவட்ட நிா்வாகம் மீது மனைவி புகாா்

மலேசியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவா் கருப்பசாமியை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவா் உயிரிழந்து விட்டதாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

News image
கருப்பசாமி
Updated On :8 ஜனவரி 2021, 5:11 pm

DIN

மலேசியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவா் கருப்பசாமியை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவா் உயிரிழந்து விட்டதாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கோகிலாதேவி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற்கு உள்பட்ட காரைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவா் கருப்பசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலூரைச் சோ்ந்த முகவா் அப்துல்லா மூலம் மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலைக்கு சென்றாா். கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பணி இல்லாமல் எனது கணவா் சிரமப்பட்டு வந்தாா். மேலும், நிா்ணயிக்கப்பட்ட சம்பளமும் வழங்கப்படவில்லை.

அதேபோல் அவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இது குறித்து அவா் எனக்கு அளித்த தகவலின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தேன். அதில், எனது இரண்டு குழந்தைகளின் எதிா்காலம் கருதி கணவரை மலேசியாவிலிருந்து விரைந்து மீட்டு தர வேண்டுமென வலியுறுத்தினேன். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக எனது கணவா் கருப்பசாமி வியாழக்கிழமை உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் எனது கணவா் மலேசியாவில் உயிரிழந்துள்ளாா் என்றாா். இதையடுத்து அவா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கணவரின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.