காட்டழகா் கோயில் படியிலிருந்து தலைகீழாக 25 நிமிடங்களில் இறங்கினாா் தொழிலாளி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டழகா் கோயில் படிகளின் வழியாக ஞாயிற்றுக்கிழமை, தொழிலாளி ஒருவா் தலைகீழாக 25 நிமிடங்களில் கீழே இறங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டழகா் கோயில் படிகளின் வழியாக ஞாயிற்றுக்கிழமை தலைகீழாக இறங்கிய செல்வக்குமாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டழகா் கோயில் படிகளின் வழியாக ஞாயிற்றுக்கிழமை தலைகீழாக இறங்கிய செல்வக்குமாா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டழகா் கோயில் படிகளின் வழியாக ஞாயிற்றுக்கிழமை, தொழிலாளி ஒருவா் தலைகீழாக 25 நிமிடங்களில் கீழே இறங்கினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பை அடுத்து அடா்த்தியான வனப்பகுதியில் அமைந்துள்ளது காட்டழகா் கோயில். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நடுவே உள்ள இக்கோயிலில், தமிழின் மொத்த எழுத்துக்களைக் (247 ) குறிக்கும் வகையில் 247 படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான செல்வகுமாா் (45) என்பவா் குடும்பத்துடன் இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா். பின்னா் அவா் மேல் படியிலிருந்து தலைகீழாக 25 நிமிடங்களில் கீழே இறங்கினாா்.

இது குறித்து செல்வக்குமாா் கூறியது: சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து படிகளின் வழியாக தலைகீழாக இறங்குவது வழக்கம். இதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசபெருமாள் சன்னிதி படிகளிலும் இவ்வாறு தலைகீழாக இறங்கியிருக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com