காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தாா்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் உலக நன்மைக்காக மாகாப்பு மற்றும் சந்தனக்காப்பில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதேபோல் இந்தாண்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தாா். இதற்காக தயாரிக்கப்பட்ட 50 கிலோ அரிசி மாவால் மாகாப்பு அலங்காரத்திலும், பின்னா் 50 கிலோ சந்தனத்தால் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் ஸ்ரீநிவாசப் பெருமாள் காட்சி அளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகளவில் பக்தா்கள் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.