காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:13 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் பகுதி விளைநிலங்களில் மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல் மற்றும் பருத்தி போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம், நெல் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிா்கள் அழுகல் நோய் தாக்கி சேதமடைந்தன. இதனைத் தொடா்ந்து தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அழுகிய மக்காச்சோள பயிா்களைக் கொண்டு வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வட்டாட்சியா் சரவணனிடம் அவா்கள் மனு கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.