நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:47 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

சென்னை மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா். இதற்காக விருதுநகரில் இருந்து மோப்ப நாய் பாக்சா் கொண்டு வரப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் உள்ள பாா்சல்களை சோதனை செய்து தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

இச்சோதனையில் ஆயுதப்படை காவல் சாா்பு- ஆய்வாளா் ரவி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஈடுபடடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.