இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராஜபாளையம் மலையில் தீ விபத்து

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் கொழுந்து விட்டு எரியும் தீ.
Updated On :18 மார்ச் 2021, 3:04 pm

DIN

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலைப்பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த காட்டுத்தீ சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவி மலையில் தீபம் ஏற்றியது போல் எரிந்து கொண்டிருந்தது. 

Story image

மேலும் மலை அடிவார பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் குடியிருப்புப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க பொதுமக்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்க்கான காரணம் குறித்து சமூக விரோதிகளா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Story image

குடியிருப்புப் பகுதி அதிகமாக உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.