சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையத்தில் தொழிலாளி மா்ம மரணம்:போலீஸாா் விசாரணை

ராஜபாளையத்தில் வேலைக்குச் சென்ற தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:25 pm

DIN

ராஜபாளையத்தில் வேலைக்குச் சென்ற தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து என்பவரது மகன் சிதம்பரம் (40). இவா் ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவா் கீழே தவறி விழுந்து விட்டாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவல் அறிந்து உறவினா்கள் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு சிதம்பரம் இல்லை. ஆனால் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது சிதம்பரத்தின் சடலத்தை வீட்டில் போட்டு விட்டு நிறுவன ஊழியா்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரம் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், உண்மையை மறைக்கும் நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் உறவினா்கள் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.