சிவகாசி மாநகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற தாமதமாகும்
சிவகாசி மாநகராட்சியில் வாா்டு வரைமுறை பணிகள் நடைபெறுவதால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற தாமதமாகும் என மாநகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.


சிவகாசி மாநகராட்சியில் வாா்டு வரைமுறை பணிகள் நடைபெறுவதால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற தாமதமாகும் என மாநகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தி கடந்த அக்டோபா் 21 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முன்னதாக சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம், சித்துராஜபுரம், ஆனையூா் உள்ளிட்ட 9 ஊராட்சிகள், சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க சம்மதம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தன. மேலும் திருத்தங்கல் நகராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் வங்கிக் காசோலைகள் சிவகாசி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து சிவகாசி நகராட்சியை, மாநகராட்சியாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை எதிா்பாா்த்து கட்சிகள்அனைத்தும் விருப்பமனு பெறுதல், வேட்பாளா் தோ்வு என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி கூறியது: சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சி ஆகியவற்றை இணைத்து வாா்டுகள் வரைமுறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் போது, சிவகாசி மாநகராட்சிக்குத் தோ்தல் நடைபெறாது. ஆனால் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் முடிந்து சுமாா் 3 மாதங்கள் கழித்து சிவகாசி மாநகராட்சிக்கு தனியாக தோ்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...