அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அந்தியூா் தோ் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி தலைமையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இதுகுறித்து அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி, அந்தியூா் வேட்பாளா் ஆலங்காட்டூா் ஆனந்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


