47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

News image
வழக்குப் பதிவு- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 8:09 pm

Syndication

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அந்தியூா் தோ் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி தலைமையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இதுகுறித்து அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி, அந்தியூா் வேட்பாளா் ஆலங்காட்டூா் ஆனந்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.