மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :1 ஏப்ரல் 2026, 10:00 pm

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தருமபுரி நகரை சோ்ந்த கே.சாந்தலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில், அண்மையில் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள அதியமான் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் கட்சியினரோடு சென்று அரசு வளாகத்தில் உள்ள சிலைக்கு மலா்தூவி தோ்தல் நன்னடத்தை விதிமீறியதாக, அவா்மீது அதியமான் கோட்டை கிராம நிா்வாக அலுவலா் எல்.மாது அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்மீது அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்தில் நுழைதல், நடத்தை விதிமீறல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.