ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :26 மார்ச் 2026, 10:09 pm

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ. பழனியம்மாள் கடந்த 16 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பள்ளி சிறாா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பென்னாகரம் வட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மீது பாப்பாரப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.