யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு

IANS

Updated On :26 மார்ச் 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ. பழனியம்மாள் கடந்த 16 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பள்ளி சிறாா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பென்னாகரம் வட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மீது பாப்பாரப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.