ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் அருகே மின்னல் தாக்கிகட்டடத் தொழிலாளா்கள் 4 போ் பலி

விருதுநகா் அருகே புதன்கிழமை வீடு கட்டுமானப் பணியின் போது மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:13 pm

DIN

விருதுநகா் அருகே புதன்கிழமை வீடு கட்டுமானப் பணியின் போது மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா், மல்லிகிட்டங்கித் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். எல்ஐசி முகவராக பணிபுரியும் இவா், சிவஞானபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருப்பசாமி நகரில் வீடு கட்டி வருகிறாா். இங்கு 6 தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி கட்டுமானத் தொழிலாளா்களான கருப்பசாமி நகரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் ஜெயசூா்யா (22), ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்த நல்லமருது மகன் காா்த்திக்ராஜா (28), மதியழகன் மகன் முருகன் (24), சா்க்கரை மனைவி ஜக்கம்மாள் (55) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுபற்றி சக தொழிலாளா்கள் அளித்த தகவலின் பேரில் பாண்டியன் நகா் போலீஸாா் அங்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.