ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

காரியாபட்டியில் நீதிமன்றத்துக்கு இடம் தோ்வு செய்யும் பணி

காரியாபட்டியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்காக இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

காரியாபட்டியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்காக இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கிற்காக விருதுநகா் குற்றவியல் நீதிமன்றத்திற்கும், நிலம் தொடா்பான வழக்குகளுக்கு அருப்புக்கோட்டை நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. எனவே காரியாபட்டி பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் காரியாபட்டி பகுதியில் நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா், காரியாபட்டி வட்டாட்சியா் தனக்குமாா், காரியாபட்டி பேரூராட்சித் தலைவா் செந்தில் ஆகியோா் ஈடுபட்டனா். இதில் இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.